கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து கேஸ் சிலிண்டர் வெடித்தது. மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தளவாய் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 70. இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவரது மகள்கள் மற்றும் மகன் திருமணமாகி இரு வேறு இடங்களில் குடியிருந்து வருகின்றனர்.
இதனால் இவர் நனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனால் வீட்டுக்குள் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் மின்னல் வேகத்தில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் ஆறுமுகம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அப்பகுதி குறுகலான தெரு என்பதால் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தும் உரிய நேரத்தில் தீயணைப்புத்துறையினர் வர இயலவில்லை. இதனால் மூதாட்டியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.