அகில இந்திய அளவில் வென்ற தலைமைக் காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

அகில இந்திய அளவில் வென்ற தலைமைக் காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டியில் முதலிடம் பெற்ற தலைமைக் காவலரை மதுரை மாவட்ட ஊரகக்காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் பாராட்டினார். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டிகள் கடந்த 10-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றன.

இதில் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் புகைப்படம், ஒளிப்பதிவுப் பிரிவில், தமிழகக் காவல் துறை சார்பாக திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் ராஜா பங்கேற்று முதலிடம் பெற்றார். இதைத்தொடர்ந்து, மதுரை திரும்பிய தலைமைக் காவலர் ராஜாவை, மாவட்ட ஊரகக் காவல் கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் திங்கள்கிழமை பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தார். அகில இந்திய அளவில் வென்ற தலைமைக் காவலர் ராஜா அவர்களை லெமூரியா நியூஸ் குழுமம் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!