மதுரை செய்த மிக அரிதான சிகிச்சை… ஹானா ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

மதுரை செய்த மிக அரிதான சிகிச்சை… ஹானா ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

9 மாத குழந்தைக்கு மூளை அனியுரிசம் வெடித்த நியூரோ எண்டோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை செய்து மதுரை ஹானா ஜோசப் மருத்துவர்கள் சாதனை.


உலக அளவில் குழந்தைக்கான 4 வது மூளை அறுவை சிகிட்சையும் ஆசிய அளவில் குழந்தைக்கான முதல் மூளை அறுவை சிகிட்சை செய்த மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.

மதுரை ரிங் ரோட்டில் உள்ள ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத கைக்குழந்தைக்கு மூளை அனியுரிசம் கட்டி வெடித்து சுய நினைவிழந்த நிலையில் இருந்த கைக்குழந்தைக்கு மிகச் சிக்கலான நியூரோ எண்டோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை.

மருத்துவர் அருண்குமார் தலைமையிலான மருத்துவர்கள் குழந்தை மூளை அனியுரிசம் அறுவை சிகிட்சை செய்து சாதனை படைத்தனர்.

இது குறித்து
தென் தமிழகத்தின் நரம்பியல் மற்றும் விபத்து சிகிச்சைக்கு சிறந்து விளங்கும் மருத்துமனையானஹானா ஜோசப் மருத்துவமனையின் சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் அருண்குமார் செய்தியாளர்களிடம் விளக்கினார்

9 மாதமே ஆன கைக்குழந்தை கோமா நிலையில் சென்றதை அறிய ஆஞ்சியோகிராம் மூலம்
மூளை அனியுரிசம் கட்டி வெடித்து மூளையில் ரத்த கசிவு இருப்பதை கண்டறிந்து அக்குழந்தைக்கு மண்டை ஓட்டை திறந்து செய்யும் மைக்ரோ சர்ஜிகல் கிளிப் முறைக்கு பதிலாக மிகச்சிக்கலான உயிர் காக்கும் நியூரோ எண்டோவாஸ்குலர் அறுவை சிகிச்சையை குழந்தையில் தொடையில் சிறிய துளையிட்டு நரம்பு மூலம் மைக்ரோ கத்தீட்டர்ஸ் மூலம் மூளை அனியுரிசம் கட்டியை பலூன் அசிஸ்டன்ஸ் உடன் பிளாட்டினம் ஹைட்ரோ காயில்கள் மூலம் கட்டியை முறையாக மூடி இரத்த கசிவு ஏற்படாமல் தடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு குழந்தை 5 நாட்களுக்கு பின்னர் உணர்வு வரப்பெற்று பின்னர் முறையான சிகிச்சைக்கு பின்னர் 17 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது உலகிலேயே இந்த மாதிரியான சிகிச்சை இது வரை 3 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய மற்றும் இந்திய அளவில் குழந்தைக்கான முதல் அறுவை என மருத்துவ துறை ஜர்னல் மூலம் தெரிய வந்துள்ளது.

. இது மதுரையில் செய்யப்பட்ட மிக அரிதான சிகிச்சைகளில் ஒன்று. மேலும் உலக அளவில் மிகச் சில மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய அறுவை சிகிச்சைகள் கைக்குழந்தைகளுக்கு செய்யப்படுகிறது. மேலும் இந்த அறுவை சிகிச்சை மூளை அனியுரிசம் வெடிப்பு ஏற்பட்ட கைக்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான சிகிச்சை மிக அரியது.

புதுமையான அணுகுமுறை, வெற்றிகரமான முடிவுகள் என்பது நம் இந்திய நாட்டின் வலிமையை உலகிற்க்கு உணர்த்துவதோடு எதிர்காலத்தில் இது போன்ற சிக்கலான அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் நோயாளிகளுக்கு நம்பிக்கையை தரும் என்றார் அவருடன் சிகிச்சை அளித்த மருத்துவர் விநாயகமணி படத்துடன் விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை தலைமை மார்க்கெட்டிங்
மேலாளர் சேகர் ஏற்பாடு செய்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!