இந்தியை எதிர்க்கும் திமுக லட்சணம் இதுதானா..! வீட்டு வாசலில் சேர்மன் செய்த செயலால் பெரும் பரபரப்பு..

இந்தியை எதிர்க்கும் திமுக லட்சணம் இதுதானா..! வீட்டு வாசலில் சேர்மன் செய்த செயலால் பெரும் பரபரப்பு..

தமிழகத்தில் மூன்றாவது மொழியாக இந்தி மொழியை திணிக்க கூடாது என்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அதன் படி நேற்று இந்தி மொழியை அழித்து பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில், இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு வாசலில் கோலம் போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில்   தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக நிர்வாகிகளும் இந்தி எதிர்ப்பு ஆதரவாளர்களும் தங்கள் வீட்டு வாசலில் இந்தியை எதிர்ப்போம் என கோலம் போட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாநகர், மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசலில் கோலமிட்டனர்.

அதில், கோவை பாப்பநாயக்கன்பாளையம் பொன்னிநகரில் உள்ள வீடுகள் முன்பு, தி.மு.க.வினர் இன்று காலை பெரிய கோலம் போட்டனர். அதில் இந்தி மொழி திணிப்பை எதிர்ப்போம். இந்தி மொழியை திணிக்காதே. தமிழ் வாழ்க என்று எழுதப்பட்டிருந்தது.

இதேபோல், அந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு இன்று காலை போடப்பட்ட கோலங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பகுதி செயலாளர் நாகராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, வட்டச் செயலாளர் ஜெபமாலை தாஸ், சந்திரசேகர் மற்றும் தி.மு.க. மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து திருநெல்வேலி  மண்டல சேர்மன் மகேஷ்வரி வீட்டு வாசலில் இந்தி திணிப்பை ஏதிர்ப்போம் என அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்பதற்கு பதிலாக ‘ஏதிர்ப்போம்’ என எழுத்துப் பிழையுடன் எழுதியதால் சமூக வலைதளங்களில் வைரலாகி இதுதான் நீங்கள் இந்தியை எதற்கும் லட்சணமா – தமிழை வளர்க்கும் லட்சணமா என திமுகவை பார்த்து கேள்வி எழுப்பிய படி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!