திருமங்கலம் அருகே டூவீலரில் இருந்து கீழே விழுந்தவர் பலி!

திருமங்கலம் அருகே டூவீலரில் இருந்து கீழே விழுந்தவர் பலி!

மதுரை மாவட்டம் திருமங்கலம் மேல உரப்பனூர் பகுதியில் வசிக்கும் சீனி தேவரின் மகன் ஜெயபாண்டி (59) என்பவர் கடந்த 4ம் தேதி 9.30 மணியளவில் கரடிக்கல் – கூத்தியார்குண்டு ரோட்டில் சுந்தரம் வெல்டிங் கடை அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ஜெயபாண்டி நேற்று (பிப் .21) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மகன் அருண் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!