திருப்பரங்குன்றம் அருகே பைக் திருடிய 3 போ் கைது

திருப்பரங்குன்றம் அருகே பைக் திருடிய 3 போ் கைது

மதுரை மாவட்டம் திருநகர் அருகே உள்ள ஆர். வி.பட்டி சிவன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் அண்ணாமலை கார்த்திக் (32) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்த போது அது திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவர் திருநகர் போலீசில் புகார் செய்திருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருப்பரங்குன்றம் மூலக் கரை சித்தி விநாயகர் கோவில் தெரு பாலு மகன் கார்த்தி (22),தென்பரங் குன்றம் கருவாட்டு பாறை பாண்டி மகன் பாலமுருகன் (23), பசுமலை அண்ணா நகர் மணிகண்டன் மகன் கார்த்திக் (18) ஆகிய மூவர் இருசக்கர வாகனத்தை திருடியுள்ளனர் என தெரிந்ததால் மூவரையும் போலீசார் நேற்று முன்தினம் (பிப்.20) கைது செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!