பழனியில் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தும் ஊழியர்கள்… அறநிலையத்துறைக்கு அதிர்ச்சி புகார்.!

பழனியில் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தும் ஊழியர்கள்… அறநிலையத்துறைக்கு அதிர்ச்சி புகார்.!

அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடான திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பழனி முருகன் கோயில். பழனி முருகன் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

பழனி மலைமேல் உள்ள முருகனை தரிசனம் செய்ய படிப்பாதை, யானைப்பாதை, வின்ச் சேவை ( மின் இழுவை இரயில்) மற்றும் ரோப்கார் சேவை (கம்பி வட ஊர்தி) உட்பட நான்கு வழி பயணம் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்யலாம்.

வின்ச் மற்றும் ரோப்கார் சேவை மூலம் செல்லும் பக்தர்கள் 50 ரூ பயணச்சீட்டு எடுத்து பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது. இதில் ஒரு ரோப்கார்க்கு 3 பேர் அனுமதியுடன் 4 ரோப் கார் மூலம் ஒரு முறை 12 நபர்கள் மட்டும் பயணம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் 50ரூ பயணச்சீட்டு எடுத்து காத்திருப்பு கூடத்தில் தங்கியிருக்க…

அதே வேளையில் சில பக்தர்களிடம் 500 ரூ முதல் ஆளுக்கு தகுந்தாற் போல் இஷ்டத்துக்கு அங்கே பணிபுரியும் ஊழியர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் கூட்டிச்சென்று ரோப் காரில் ஏற்றி மலைக்கோயிலுக்கு அனுப்பி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுத்தது.

அதைத்தொடர்ந்து பக்தர் ஒருவர் பணத்தை எடுத்து கொடுக்கும் போது அதை ஊழியர் பெறும் காட்சியும், ரோப்கார் நிலைய கண்காணிப்பாளர் கிட்டம்மாள் உடன் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக சிறப்பு தரிசனம் செய்வதற்கு பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில், தற்போது பக்தர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் பக்தர்களை மலைக்கு செல்ல அனுமதிக்கும் வீடியோ வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்பந்தமாக பழனி கோயில் தேவஸ்தானம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. கோயில் நிர்வாகத்திற்கு தெரிந்தே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறதா என்கிற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்து வந்தது.

அதைத்தொடர்ந்து இம்முறைகேடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும், தமிழக முதல்வருக்கும் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியதாவது: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரோப்கார் கண்காணிப்பாளராக பணிபுரியும் கிட்டம்மாள் அவர்கள், கேம்பில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் மூன்று பேர் மற்றும் அரவிந்த் அசோசியேட்ஸ் மூலம் பணிபுரியும் மாதேஷ் ஆகியோர்களை கையில் வைத்துக் கொண்டு, இவர்கள் மூலம் ரோப்கார் வெளியில் காத்திருக்கும் அறையில் பொழுதிற்கும் அமர்ந்து இருக்கும் பண்டாரங்களிடம் தொடர்பு வைத்து ஒரு நபருக்கு ரூபாய் 3000 பெற்றுக் கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கிறார்.

பண்டாரங்கள் கேம்பில் பணிபுரியும் 3 நபர்களை தொடர்பு கொள்கின்றனர், அவர்கள் உயர் அதிகாரிகளின் உறவினர்கள் என்று பொதுவெளியில் கூறிக்கொண்டு, பண்டாரங்களிடம் பெற்ற தொகையில் கிட்டம்மாவிற்கு பங்கு வழங்கி ரோப்காரில் பயணிக்கின்றனர்.

இதனால் பாதிக்கப்படுவது முருகனின் உண்மை பக்தர்கள் மட்டுமே. தற்போது youtube -ல் வெளிவந்த பாரஸ்ட் துறை சேர்தவர் வீடியோவில் பணம் பெறுவது மட்டுமே உள்ளது. அவர் யாருக்காக பெற்றார் என்பது குறித்து கோவில் அதிகாரிகளால் விசாரணை செய்யப்படவில்லை. கோவில்
பணியாளர் என்றால் மட்டும் அதிகாரம் வர்க்கம் தங்களது சாட்டையை சுற்றி
வீட்டிற்கு அனுப்பபட்டு இருப்பார்கள். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்திட வேண்டும் என்று பழனி அருகே உள்ள மல்லைய கவுண்டன்பட்டியை சேர்ந்த எஸ்.தனராஜ் என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இப்பதான் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய விசாரணை செய்யப்பட வேண்டும் என பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்க வைக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!