முருக பக்தர்கள் கவனத்திற்கு ..! மருதமலை முருகன் கோவில் செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு!

முருக பக்தர்கள் கவனத்திற்கு ..! இன்று முதல் மருதமலை கோவில் செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு!

முருகனின் ஆறு படை வீடுகள் எவ்வளவு புகழ் பெற்றதோ, மருதமலை முருகன் கோவிலும் அதேபோல சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இக்கோவிலை முருகப் பெருமானின் ஏழாவது படைவீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

மருதமலை முருகன் கோவிலுக்கு ஏரளமான பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். குறிப்பாக கிருத்திகை, சஷ்டி, செவ்வாய் கிழமைகள், தைப்பூசம் ஆகிய விஷேச நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். விடுமுறை, பண்டிகை காலங்களில் மக்கள் இங்கு அதிகம் வருகை புரிவது வழக்கம்.

மருதமலைக்கு அடிவாரம் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து மலைப்பாதையில் சிற்றுந்து, இருசக்கர வாகனம், கார் மூலம் மேலே இருக்கும் கோவிலுக்கு செல்லலாம்.படி பாதை வழியாகவும் நடந்து சென்று தரிசனம் செய்யலாம். அவ்வப்போது குறிப்பிட்ட நாட்களில் மலைப்பாதையில் செல்ல கார், இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும்.

இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பணிகள் நடைபெற இருப்பதால், பக்தர்கள் மலை பாதையில் வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் ஏப்ரல் 4 ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.இதற்காக கோவிலில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டி உள்ளதால் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை மலை பாதையில் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதேபோல பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 6 வரை செவ்வாய், ஞாயிறு, கிருத்திகை, அரசு விடுமுறை தினங்களில் பக்தர்கள் இரு சக்கர வாகனங்களில் மலைக்கு செல்ல அனுமதியில்லை.

எனவே, பகதர்கள் மலை படிகள், கோவில் பேருந்துகள் மூலம் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!