
ஊடக உரிமை காக்க பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு விழா!
16-02-2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் நடைபெற்ற தென்னிலை கதிர் மாதம் இருமுறை இதழ் மற்றும் ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்க அலுவலக திறப்பு விழா மற்றும் துப்புரவு பணியாளர்களை மரியாதை செய்து அவர்களுக்கு நல திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த என் உயிரினும் உயிரான ஊடக சொந்தங்கள்,அரசு அதிகாரிகள், காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கேட்ப கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த காவலர்கள், வழக்கறிஞர்கள்,நண்பர்கள் தோள் கொடுக்கும் தோழமைகள், பல்வேறு அமைப்பு தலைவர்கள், இயக்க தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுடைய ஊக்கமும்,ஆக்கமும் என்னுடைய பத்திரிகை பணி மற்றும் அரசியல் பயணம் தொடர நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பது இதிலிருந்து நன்கு புரிந்து கொண்டேன்.
அதுமட்டுமில்லாமல் என்னை தொடர்பு கொண்டு கைபேசி மூலமாக வாழ்த்துக்களை கூறிய பல அமைப்புகளை சார்ந்த தலைவர்கள், இயக்கங்களின் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கேரளா , கர்நாடக, பாண்டிச்சேரி, டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து வாட்ஸ் அப்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நண்பர்கள் மற்றும் முகநூலில் வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி என தென்னிலை கதிர் இதழ் ஆசிரியரும், ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளருமான முனைவர் வி.எம்.தமிழன் வடிவேல் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.