
சீமான் அதிரடி கைது..! காரணம் என்ன.?
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, பாஜக என அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இதற்கிடையே, இன்று (டிச.,31) காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
காவல்துறையினர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தொண்டர்களை அதன் தலைவர் சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்துள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள பதிவில், “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை, இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை ஒன்றிணைந்து, இன்று (31-12-2024) காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவிருக்கின்றது. மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்” என்று போராட்டத்துக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில் தொண்டர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்திருக்கிறார்.
அதன்படி, ஆர்ப்பாட்டத்துக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்த அவர்களை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து போராட்டத்துக்கு வந்த சீமான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைதின்போது பேசிய சீமான், ஜனநாயக ரீதியில் போராட வந்த தன்னை காவல்துறை ஒடுக்குகிறது என்று குற்றம் சாட்டினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.