இராஜபாளையம் அருகே ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை முன்பு திமுக மாநில மகளிரணி அமைப்பாளரும் தூத்துக்குடி எம்பியும் மான கனிமொழி மக்களிடம் சிறப்புரை.
நலிவடைந்துள்ள ஆலங்குளம் அரசு சிமிண்ட் ஆலை மண்ணோடு மண்ணாகப் போகும் அவலநிலை ஆலங்குளம் சிமெண்ட் ஆலை இந்த தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபாயம் இந்த ஆலையை நவீனப்படுத்த தற்போது உள்ள எடப்பாடி அரசு தவறிவிட்டது.
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார் அமைச்சரால் என் உயிருக்கு ஆபத்து என்று சட்டமன்ற உறுப்பினருக்கு ஓர் அமைச்சரால் ஆபத்து ஏற்படும் அவல நிலைதான் தற்போது நடைபெறும் ஆட்சியில் உள்ளது.
நாள்தோறும் எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்திற்கும் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இவருக்கு உள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு நேரமில்லை இவர்களுக்கு பஞ்சாயத்து பேசுவதற்கு டெல்லியிலிருந்து ஆள் வர வேண்டியிருக்கிறது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் பாலில் ஏகப்பட்ட உழல் நடைபெறுகிறது.எடப்பாடி அரசு எங்கு பார்த்தாலும் எதிலும் ஊழல் கொரோனா பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் ஊழல்,மாஸ்க வாங்கியதில் ஊழல் மேலும் பரிசோதனை செய்யும் கருவி வாங்கியதில் ஊழல், சாலை அமைப்பதில் ஊழல், சாலை அமைப்பதில் எங்கு பார்த்தாலும் எடப்பாடிக்கு வேண்டியது மட்டுமே தேர்ந்தெடுக்க முடிகிறது.இதுபோன்று எண்ணிலடங்காத ஊழல் செய்து வருகின்றனர்.
இவர்களுடைய ஊழலை தட்டிக்கேட்டால் பத்திரிக்கையாளர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்ப்படுகிறது.இந்தப் பகுதியை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையை கேள்வி கேட்டால் துப்பாக்கி எடுத்துசுட்டு விடுவேன் எனக் கூறி வருகிறார்.
தூத்துக்குடியில் அமைதியாக மனு கொடுக்க போனவர்கள் மீது வன்முறைகளை தூண்டி விட்டது இந்த அரசு.
போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இந்த அரசு தான் காரணம் கேள்வி கேட்டால் எனக்கு தெரியாது நானே டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் எனக்கூறும் அவலங்கள் உள்ளது இப்படிப்பட்ட முதல்வர் நமக்குத் தேவையா..?
இதே போன்று இராஜபாளையம் சத்திரப்பட்டி பகுதியில் பேசிய போது இந்த பகுதியில் பேண்டேஜ் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு உலகத்தில் எங்குமே இல்லாத அளவிற்கு ஜிஎஸ்டி வரி அதிக அளவில் இந்தியாவில்தான் உள்ளது.ஆகையால் இந்த பகுதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்க கூடிய இலவச மின்சாரம் குறைக்கப்பட்டுள்ளது.தளபதி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இலவச மின்சாரம் கலைஞர் கொடுத்ததை போல் இலவச மின்சாரத்தை மீண்டும் வழங்குவோம் என கூறினார்.இதேபோல் இந்தப் பகுதியில் அதிக அளவில் நூற்பாலைகள் செயல்பட்டு வருகிறது நூற்பாலைகளில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.இதை உயர்த்தாமல் இந்த மத்திய அரசு உள்ளது ஆகையால் அதை உயர்த்துவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.
இதே போல் முரம்பு ஆசிலாபுரம் பகுதியில் பேசும் போது அதிமுகவில் தற்போது ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் காலில் விழுவது புதிதல்ல மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அவர் காலில் விழுந்தார்.
அதன் பின்பு சசிகலா காலில் விழுந்து பதவியை பிடித்தார் தற்போது மோடி காலிலும் அமித்ஜா கலிலும் விழுந்து அடிமையாக உள்ளனர் இவர்களால் மோடி கொண்டுவரும் எந்த திட்டத்தை எதிர்த்துப் பேச முடியாது இந்தப் பகுதியை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மோடியை டாடி என்று கூறினார் ஆகையால் டாடியின் திட்டத்தை இவர்களால் எதிர்க முடியவில்லை என குற்றம் சாட்டினார்.
எதிர்த்துக் கேள்வி கேட்டால் கொலை செய்யும் கட்சி தான் இந்த ஆட்சி ஆகையால் தான் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என கூட்டத்தில்பேசினார்.