மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு கல்வி உதவி செய்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ Dr.சரவணன்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர். முனியசாமி கிருத்திகா தேவி தம்பதிகள். இவர்களுக்கு நிவேதா, கிருத்திகா தேவி என 2 மகள்களும் மற்றும் சிவ முனிஸ்வரன் என்ற மகன் உள்ளனர்.

மூத்த மகள் பொறியியல் பட்டதாரி திருமணமாகியுள்ளது.

இரண்டாவது மகள் கிருத்திகா தேவி நீட் தேர்வில் பாஸ் ஆகி தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தந்தை முனியசாமி சிப்ஸ் மற்றும் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார்.

தற்போது கொரான காலத்தில் தந்தை முனியசாமி வியாபாரம் செய்ய முடியாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தார்.

இந்நிலையில் இரண்டாம் ஆண்டு மருத்துவ கட்டணம் கல்விக்கான கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்ட சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் இடம் தனது கல்லூரி படிப்பை தொடர உதவி கோரினார்.

இதனைத்தொடர்ந்து டாக்டர் சரவணன் இன்று மருத்துவக் கல்லூரி மாணவி கிருத்திகா தேவியின் 2 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
மீண்டும் மேலும் மூன்று ஆண்டுகளுக்கான படிப்பிற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார் .

MLA கூறியதாவது:
மாணவி கிருத்திகா தேவி இரண்டாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி கொண்டதில் வியாபாரம் செய்ய முடியாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தார். இந்நிலையில் இரண்டாம் ஆண்டு மருத்துவ கட்டணம் கல்விக்கான கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்ட சூழ்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணனிடம் தனது கல்லூரி படிப்பை தொடர உதவி கோரினார்.

இதனைத்தொடர்ந்து இன்று டாக்டர் சரவணன் மருத்துவக் கல்லூரி மாணவி கிருத்திகா தேவி வீட்டிற்கு வந்தார்.

கிருத்திகாவின் இரண்டாம் ஆண்டு கல்விக்கான .2 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.

மேலும் மூன்று ஆண்டுகளுக்கான படிப்பிற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார் .

Leave a Reply

error: Content is protected !!