அதிமுகவும், தமிழக அரசும் கவனமாக இருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் பொன்னார் வேண்டுகோள்.

Advertising

திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் தற்போதும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சில அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரில் வாக்குகள் சேகரிக்க முயல்வதாக தமிழக முதல் அமைச்சர் கூறியிருப்பது முஸ்லிம் லீக்கை குறிப்பிட்டிருக்கலாம். பாஜகவை சொல்வதற்கான வாய்ப்பு இல்லை.

திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை. பிற மாவட்டங்களிலிருந்து ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு மக்களை கொண்டு வருகிறார்கள். திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது தற்போது மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அதிமுகவும், தமிழக அரசும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் திட்டங்களை முன் கூட்டியே ஸ்டாலினுக்கு யாரோ தகவல் கொடுக்கிறார்கள்.
யாரோ அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகள் குறித்தும் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.

திமுகவினர் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் அவர்கள் விஷயத்தில் அதிமுகவும் அதிகாரிகளும் மிக கவனமாக இருக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளது. அவர் தான் முதல்வர் வேட்பாளர்.

பெங்களூரிலிருந்து சசிகலா தமிழகத்திற்கு வந்த போது மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை பெரிய எழுச்சியாக நான் கருதுகிறேன். இது அவர்களின் கட்சிக்கு பலமுள்ளதாக இருக்கும். இதற்கு முன்பு எம்ஜிஆருக்கு இதுபோன்ற வரவேற்பு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவை உடைத்ததும் பாஜகதான் அதிமுகவை ஒருங்கிணைக்க முயல்வதும் பாஜக தான் என்ற கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது சூரியன் உதிப்பதும் பாஜகவால் தான் மறைவதும் பா.ஜ.கா வால் தான். உங்கள் கருத்து கற்பனையானது என்றார்.

Leave a Reply

error: Content is protected !!