கன்னியாகுமரியில் தரையில் அமர்ந்து பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டம்

Advertising

கன்னியாகுமரி மாவட்டம்
அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத் யூனியன் கூட்டத்தில் தி்முக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத் யூனியன் கூட்டம் தலைவர் அழகேசன் தலைமையில் இன்று நடந்தது. துணைதலைவர் சண்முகவடிவு, கவுன்சிலர்கள் ஆரோக்கியசவுமியா, பிரேமலதா, பால்தங்கம், ராஜேஷ், அருண்காந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் தொடங்கி அஜெண்டா வாசிக்க தொடங்கியதும் திமுக கவுன்சிலர் ஆரோக்கிய சவுமியா நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டு தலைவர் மற்றும் அதிகாரிகள் முன்பு அமர்ந்து கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் தமிழக அரசை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டார்.

மேலும் இதுவரை நடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்றும் தனது கவுன்சில் பகுதி புறக்கணிக்கபடுகிறது என்றும் யூனியன் பகுதியில் நடக்கும் பணிகள் யாருக்கும் தெரியபடுத்துவது கூட கிடையாது என்று தி்முக கவுன்சிலர் ஆரோக்கியசவுமியா தரையில் அமர்ந்து சுமார் ஒருமணிநேரமாக தர்ணாவில் ஈடுபட்டார்.

தி்முக கவுன்சிலர் ஆரோக்கியசவுமியா தர்ணாவில் ஈடுபட்டபோது மற்ற தி்முக கவுன்சிலர்களான பிரேமலதா மற்றும் அருண்காந்த் ஆகிய இருவரும் ஆரோக்கியசவுமியாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் பேசாமல்
வேடிக்கை பார்த்தனர்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத் யூனியன் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Leave a Reply

error: Content is protected !!