100 நாள் வேலை மகன் எதிர்ப்பு – தாய் ஆதரவு..? செய்தி சேகரிக்க வந்தவர்கள் அதிர்ச்சி! – சீமான் விளக்கம்.

100 நாள் வேலை மகன் எதிர்ப்பு – தாய் ஆதரவு..? செய்தி சேகரிக்க வந்தவர்கள் அதிர்ச்சி! – சீமான் விளக்கம்.

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்கள், பெண்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. கடந்த 2013 -14 ஆம் நிதியாண்டில் இந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது ஒருநாள் ஊதியம் ரூ.155 ஆக இருந்தது. தற்போது 10 ஆண்டுகளில் இதன் ஊதியம் ரூ.279 ஆக அதிகரித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு திட்டம் மூலம் கடினமான வேலைக்கு செல்ல முடியாத கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மனு கொடுக்க வந்த சீமானின் தாய்

இந்த நிலையில் தான் 100 நாட்கள் வேலை திட்டம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் மனு கொடுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் என்பதுதான் சீமானின் சொந்த ஊர் ஆகும். இங்கு சீமானின் தாய் அன்னம்மாள் வசித்து வருகிறார். இந்த நிலையில் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் அவர் ஊரில் வாழும் மக்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி என்பது சரியாக வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் பெரியளவில் பாதிக்கப்பட்ட நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி அரணையூரைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சென்று கோரிக்கை மனு அளித்த நிலையில் அதில் அன்னம்மாளும் சென்று இருந்தார். அவர் காரில் சென்று மக்களுடன் மக்களாக நின்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி முறையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இளையான்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு வழங்கப்பட்ட நிலையில் அங்கு செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் சீமானின் தாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் அன்னம்மாள் மீண்டும் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவரது காரின் முன்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொருத்தப்பட்டிருந்தது.

மகன் எதிர்ப்பு – தாய் ஆதரவு

அதே சமயம் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். வெட்டி வேலை என்று இந்த பணியை அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார். மேலும் வேளாண் பணிகளை செய்ய ஆட்கள் இல்லை என்றும், விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் 100 நாட்கள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோல் மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிடும் வகையில் இந்த திட்டம் உள்ளதாகவும் சீமான் கூறினார். மேலும் இது குறித்து பேசியிருந்த சீமான், ” 100 நாள் வேலைத்திட்டத்தால் என்ன பயன் இருக்கிறது?, எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ்நாட்டில் தூர்வாரப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய சீமான், எத்தனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினால் இல்லை என்பதுதான் பதிலாக வருகிறது. அப்படி பயனில்லா திட்டங்கள் எதற்காக? இத்திட்டத்திற்கு செல்லும் ஆண்கள் சீட்டாடுகிறார்கள், பெண்கள் பல்லாங்குழி ஆடுவதோடு புறணி பேசுகிறார்கள். கேட்டால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என சொல்கிறார்கள்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மகன் எதிர்க்கும் அதே திட்டத்துக்கு தாய் அன்னம்மாள் பணி வழங்கும்படி மக்களோடு மக்களாக சென்று மனு கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் மகன் ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் தாய் இன்னமும் அதே கிராமத்தில் பழைமை மாறாமல் சொந்த ஊராரோடு சேர்ந்து வாழ்வது ஆச்சரியமாக இருப்பதாகவும் அன்னம்மாளை ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!