2024-ன் கடைசி பிரதோஷம் – மலர் அலங்காரத்தில் சொல்லித்த நந்தி.. திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
பிரதோஷ திதி என்றாலே, சிவபெருமானுக்கு உரிய விரத நாட்களில் மிக விசேஷமானது என்று பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும்.
ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷ நாட்கள் வந்தாலும், ஒரு சில மாதங்களில் வரும், சில கிழமைகளில் வரும் பிரதோஷம் விசேஷமானவை. அதில் ஒன்று தான் சனிக்கிழமை வரும் சனி தோஷமாகும். மார்கழி மாதம் தேய்பிறை பிரதோஷம் சனிக்கிழமை இன்று. இந்த ஆண்டின் முதல் பிரதோஷமும் சனி பிரதோஷமாகத் தொடங்கி, கடைசி பிரதோஷமும் சனி பிரதோஷமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சனி பிரதோஷத்தின் சிறப்புகள் என்ன?
ஏன் சனி மகா பிரதோஷம் மட்டும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது
பிரதோஷம் என்பது வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் 13வது நாளாகும். தேவர்களும் அசுரர்களும் அமிர்ததுக்காக பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து ஆலகால விஷம் வெளியானது.
உலகை காக்க, சிவபெருமான் அந்த ஆலகால விஷம் அருந்திய நேரம் தான் பிரதோஷ நேரம் என்று கூறப்படுகிறது. ஈசன் அந்த கொடிய விஷத்தை அருந்தி உலகை காத்தருளிய நாள் சனிக்கிழமை அன்று நடந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. எனவே தான் சனிக்கிழமை வரும் பிரதோஷ திதி, சனி மகா பிரதோஷம் என்று விசேஷமாக கருதப்படுகிறது.
சனி மகா பிரதோஷத்தில் சிவனை தரிசித்தால் தீரும் நீங்கள் எதிர்பார்த்த விடிவு காலம் கிடைக்கும். உங்களுக்கான பிரச்சனைகளும், தோஷங்களும் தீர்வதோடு மட்டுமல்லாமல் பொதுவாகவே சனி மகா பிரதோஷத்தன்று பிரதோஷ நேரத்தில் சிவனை தரிசிப்பவர்களுக்கு முன்னோர்களின் சாபம் தீரும், கிரகங்களின் தோஷமும் விலகும் என்பதும் ஐதீகம்.
இன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று நடந்த, மார்கழி மாத தேய்பிறை சனி மஹா பிரதோஷ வழிபாட்டில் கொடிமரம் அருகே அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரே சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்தி ஆகியவற்றிற்கு, மஞ்சள், பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், உட்பட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். -செய்தியாளர் நேதாஜி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.