திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் செய்தியாளர்களை பாஜகவினர் தாக்கி கொலை மிரட்டல்..

திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் செய்தியாளர்களை பாஜகவினர் தாக்கி கொலை மிரட்டல்..

திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் பாஜக எச் ராஜா செய்தியாளர் சந்திக்கும் போது அங்கு நின்று கொண்டிருந்த செய்தியாளர்களை பாஜகவினர் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்..

திருப்பரங்குன்றம் பழனி தண்டாயுதபாணி கோவில் அருகே ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி செய்தியாளர்களை சந்திக்கும் போது பாஜகவை சேர்ந்த கோகுல பாலாஜி என்பவர் செய்தியாளர் போல் கேள்வி கேட்டு சர்ச்சை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் செய்தியாளர்களை தவறாக சிந்தித்து வீடியோ வெளியிட்டார் இது குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்காக வந்த பாஜக எச் ராஜா வை சந்தித்து செய்தியாளர்கள் இதுகுறித்து முறையிட்டனர் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்ததை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது இந்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த செய்தியாளர்களை சுற்றி இருந்த பாஜகவினர் சிலர் ஒருமையில் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்து மேலும் ஒரு செய்தியாளரை தள்ளிவிட்டு தாக்கவும் முற்பட்டனர். எனவே இது தொடர்பாக ஒட்டுமொத்த செய்தியாளர்கள் சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையின் போது செய்தியாளர்களை உரிமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த காட்சிகள் அனுப்பப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!