பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கைது!

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கைது!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் ரசிகர்களுக்கான ‘பிரிமியர் ஷோ’ சந்தியா என்ற தியேட்டரில் கடந்த வாரம் திரையிடப்பட்டது.

அப்போது தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்தார். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். காயமடைந்த அவரது மகன் தேஜா (9), மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் தியேட்டர் உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினர் அலட்சியத்தால், நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில், தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான சந்தீப், மேலாளர் நாகராஜ் மற்றும் செக்யூரிட்டி பொறுப்பாளர் விஜயசந்தர் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்து சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். கூடுதல் தகவல்கள் வெளியாக காத்திருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!