ஈரோடு கிழக்கு: களத்துல யாருமே இல்லை… முதல் ஆளாய் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக!

ஈரோடு கிழக்கு: களத்துல யாருமே இல்லை… முதல் ஆளாய் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக!

திமுக, பாஜக, தேமுதிக, பாமக என்று பிரதான கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருது பின்வாங்கியிருக்கும் நிலையில் களத்தில் யாருமே போட்டிக்கு உறுதிசெய்யப்படாத நிலையில், முதல் ஆளாய் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், அமைச்சர் முத்துசாமி ஆகியோர் இன்று 2வது நாளாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 10ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இம்மாதம் 17ம் தேதி திமுக வேட்பாளர் சந்திரகுமார் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்யாமலேயே பிரச்சாரத்தை துவங்கி சுறுசுறுப்பாக தொகுதிக்குள் சுற்றி வருகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது வேட்பு மனுவை 17ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, நாம் தமிழர் என இரண்டு கட்சிகள் மட்டுமே நேருக்கு நேராக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!