
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தமிழ் மாதமான மார்கழி வருகிற டிச.16ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 13-ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.
காலை 5.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் காலசந்தி பூஜை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், காலை 8.45 முதல் 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை நடைபெறும். பின்னர் மாலை 3.00 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும், இரவு 8 மணி முதல் 8.30க்குள் பள்ளியறை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படும்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மார்கழி 29 (ஜன.13) (திங்கள்கிழமை) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மற்ற காலங்கள் அனைத்தும் மார்கழி மாத பூஜைகள் கால அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.