இன்று மார்கழி ஞாயிற்றுக்கிழமை – இதை மட்டும் செய்தால் போதும் மொத்த கண் திருஷ்டியும் பொசுங்கி சாம்பல் ஆகும்.

இன்று மார்கழி ஞாயிற்றுக்கிழமை – இதை மட்டும் செய்தால் போதும் மொத்த கண் திருஷ்டியும் பொசுங்கி சாம்பல் ஆகும்.

மார்கழி மாதம் வரக்கூடிய 30 நாட்களுமே இறையருள் நிறைந்த சக்தி வாய்ந்த நாட்கள் தான். மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமை, நம் குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமையை தவறவிட்டாலும் சரி, அடுத்தடுத்து வரக்கூடிய மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பொருளை வாங்கி நிலை வாசலில் கட்டி தொங்க விட்டால், குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி ஆனது முழுமையாக விலகும். அந்த பொருள் என்ன அதை எப்படி நிலை வாசலில் கட்டுவது.

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை நிலை வாசலில் ஒரு படிகார கல்லை கட்டி தொங்கவிட வேண்டும். கருப்பு நிற கையில் படிகாரக் கல்லை கட்டி குலதெய்வத்தை மனதார நினைத்து, நிலை வாசலில் கட்டி தொங்க விட்டால் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகள் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறும் என்பது நம்பிக்கை. இப்படி கட்டிய படிகார கல் 6 மாதத்திற்கு அப்படியே இருக்கட்டும். 6 மாதம் கழித்து மீண்டும் அந்த படிகார கல்லை எடுத்துவிட்டு புது படிகார கல்லை கட்டிவிடலாம்

அதேபோல ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், குளிக்கும் தண்ணீரில் சின்ன படிகாரம் கல்லை தூள் செய்து குளிக்கின்ற தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரில் குளித்தாலும் உங்கள் உடம்பை பிடித்த கண்திருஷ்டி விலகும் என்பது நம்பிக்கை. இந்த குளியல் பரிகாரத்தை மார்கழி செவ்வாய், மார்கழி வியாழக்கிழமையிலும் செய்யலாம்.

இருசக்கர, வாகனம் நான்கு சக்கர வாகனம் என்று உங்களுடைய வீட்டில் எந்த வாகனம் இருந்தாலும் சரி, அந்த வாகனத்திற்கு முன்பாகவும் கருப்பு கயிறில் படிகார கல்லை ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டி தொங்க விடுங்கள். அடுத்தவர்களுடைய கண் திருஷ்டி பொறாமை குணத்தால் உங்களுடைய வாகனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இந்த மார்கழி மாதத்தில் நிலை வாசலில் தண்ணீர் தெளிக்கும்போது, அந்த தண்ணீரில் இரண்டு சிட்டிகை பரிகாரக் கல்லை போட்டு கரைத்து, அந்த தண்ணீரைக் கொண்டு வாசல் தெளித்தால் வீட்டிற்கு சுபிட்சம் உண்டாகும். எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் வீட்டிற்குள் நுழையாது. இந்த பரிகாரத்தை மார்கழி மாதம் மட்டுமல்லாமல் வேறு எந்த மாதத்தில் செய்தாலுமே உங்களுக்கு சிறப்பான பலன் கொடுக்கும்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய கையில் ஒரு துண்டு பரிகாரக் கல்லை எடுத்து, உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றவும். பிறகு இந்த படிகார கல்லை, ஒரு கட்டி கற்பூரத்தில் போட்டு எரித்து விட்டால், உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய அத்தனை கண் திருஷ்டியும் உடம்பை விட்டு விலகும்.

வீட்டில் இருக்கும் அனைவருக்கும், இந்த படிகார கல்லை வைத்து ஞாயிற்றுக்கிழமையில் திருஷ்டி சுற்றி போடுங்கள். மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டாயம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. உங்களால் எது முடியுமோ, உங்களுக்கு எது சௌகரியமோ, அந்த ஒரு படிகார பரிகாரத்தை செய்தாலும் நல்ல பலனை அடையலாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!