திருப்பரங்குன்றம் போராட்டம் தேவையற்றது – திமுக ஆட்சிக்கு அபாயம்.. பாஜக சதி.. -அமைச்சர் சேகர்பாபு!

திருப்பரங்குன்றம் போராட்டம் தேவையற்றது – திமுக ஆட்சிக்கு அபாயம்.. பாஜக சதி.. -அமைச்சர் சேகர்பாபு!

திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் உறவினர்களைப் போல வாழ்ந்து வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம் என்றும் தேர்தல் மற்றும் அரசியல் லாபத்திற்காக பாஜாக நாடகம் நடத்துவதாகவும் சேகர்பாபு குற்றம் சாட்டினார். மேலும் ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியது அழகல்ல என சொன்ன அமைச்சர் சேகர்பாபு, போராடியவர்களை இந்து அமைப்பினர் என கூறக்கூடாது என்றும் பாஜகவினர்தான் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே திருப்பரங்குன்றம் பகுதியில் நேற்று பரபரப்பான சூழல் நிலவையே நிலையில் இன்று இயல்புநிலை திரும்பி உள்ளது.

அங்குள்ள மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் இஸ்லாமிய தர்காவுக்கு சென்று வழிபடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் மலை மேல் செல்வதற்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளதால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நேற்று திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை பழங்காநத்தம் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்து இஸ்லாமிய அமைப்பினர் இடையே மோதல் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு நாட்கள் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததாக மாவட்ட சங்கீதா அறிவித்திருந்தார். இதனால் இந்து முன்னணி அமைப்பினர் திட்டமிட்டபடி அறிவித்திருந்த போராட்டம் நடத்த முடியாமல் இருந்தது. உடனடியாக அந்த அமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அணுகிய நிலையில் அவசர வழக்காக நேற்று முன்தினம் விசாரிக்க மறுத்த நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்து அனுமதி வழங்கியது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அமைதியான வழியில் நடத்த வேண்டும் என நிபந்தனைகளுடன் நீதிபதி அனுமதி அளித்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவும் உள்ளது. இந்த இரண்டு வழிபாட்டு தலங்களுக்கும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் தினமும் வந்து வழிபாடு செய்கின்றனர். இப்படியான நிலையில் இந்த மலையின் புனிதம் இஸ்லாமியர்களால் கெட்டுப் போனதாக கூறி இந்து அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பிப்ரவரி 4ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து அமைப்பைச் சார்ந்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!