கன்னியாகுமரி:மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து. தீயை அணைக்க வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் இணைந்து போராடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கிமைந்துள்ளது. இங்கு ஏராளமான விலை உயர்ந்த சந்தனம், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட காட்டு மரங்களும், மிளா, கரடி, குரங்கு உள்ளிட்ட காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் ஆரல்வாய்மொழி வனப்பகுதியில் திடீர் என காட்டுத் தீ ஏற்பட்டது. சிறிய அளவில் ஏற்பட்ட இந்த தீயை வனத் துறையினர் உடனடியாக அணைத்தனர் .

இதற்கிடையில் நேற்று இரவு திடீரென காட்டுத் தீ கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மலைப்பகுதிக்கு தீயை அணைப்பதற்கு விரைந்துள்ளனர்.

அவர்களுடன் வனத்துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!