அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது .

தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து, ஒரு உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து அதிமுக- பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிமுக விலகுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து, தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி டெபாசிட் இழக்கும் எனவும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய இன்றைய நாள் எங்களுக்கு தீபாவளி என்றும் தொண்டர்களின் கருத்து அடிப்படையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாகவும் அதிமுக கூட்டணிையை வீழ்த்த தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் பணியாற்றுவார்கள் எனவும் பாமகவின் கொள்கை பரப்பு செயலாளராக அதிமுகவின் கே.பி.முனுசாமி செயல்பட்டு வருகிறார் என தேதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்

Leave a Reply

error: Content is protected !!