மதுரை;சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அ.ம.மு.க சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை.

Advertising

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட துணைச்செயலாளர் தேவி தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்ட செயலாளர் வீர மாரி பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் முள்ளை சக்தி ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர் அருண், கிளைச் செயலாளர் போஸ் ,மதி, சந்தோஷ், அண்ணாமலை என்ற சோமு, குமார், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்….

Leave a Reply

error: Content is protected !!