அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ” ஒரு குடைக்குள் ” திரைப்பட இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்.

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ” ஒரு குடைக்குள் ” திரைப்பட இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம். கன்னியாகுமரியில் முன்னணி நட்சத்திரங்கள் முகாம்.

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அய்யாவின் அற்புதங்களை மையமாக வைத்து, ஒரு குடைக்குள் என்ற தலைப்பில் திரைப்படம் எடுக்கப் பட்டுவருகிறது. இதற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் அய்யாவின் பதிகளிலும், கடற்கரை பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயை எட்டியுள்ளதால். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக அஞ்சுகிராமம் அருகே ஆமணக்கன்விளை வாகை பகுதியில் நடைபெற்று வருகிறது. எனவே முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு, டப்பிங் உள்ளிட்ட பணிகளை முடித்து அய்யாவின் அவதார தினமான மார்ச் 4ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. மேலும் இந்த மாத இறுதியில் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தை பிரபல இயக்குனர் கே.எல் உதயகுமார் இயக்குகிறார். திரைப்படத்திற்கான வசனத்தை வசனகர்த்தா எஸ்.ஆர்.நிலா எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார். பொன் செல்வராஜ் தயாரிக்கிறார்.

வாட்ஸ் அப் குரூப்
டெலிகிராம் குரூப்

Leave a Reply

error: Content is protected !!