
மக்களிடம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விழிப்புணர்வு அவசியம் வேண்டும்.!
கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் எடைக்கு ஏற்ப தேவையான அளவு தானமாக அளிப்பவரின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் நோயாளிக்கு மாற்று அறுவை சிகிட்சை மூலம் பொறுத்தி உயிரை காக்கலாம் மக்களிடம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விழிப்புணர்வு அவசியம் வேண்டும் -Dr.ஜாய் வர்கீஸ்
முதன்மை மருத்துவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.
மதுரை வேலம்மாள் மருத்துவகல்லூரியில் உடல் உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவின் இதயம், கணையம், சிருநீரகம் புதிய மையம் திறப்பு விழா.
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் உடல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் புதிய ஆய்வு மைய துவக்க விழாவில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திருநாவுக்கரசு சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி தீன் டாக்டர் ரத்தினவேலு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கணேஷ் பிரபு மருத்துவ தலைமை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரிசிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி டீன் ரத்தினவேல்கூறுகையில் உடல் மாற்று அறுவை சிகிச்சையில் சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய உதுநிலை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிட்சைகளை செய்தவர் தற்போது வேலம்மாள் குழுமத்தில் இணைந்து
புதிய கல்லீரல் மாற்று அறுவை சிகிட்சை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுளது என கூறினார்.
விதி புதிய உடல் உறுப்பு மாற்று ஒருங்கிணைந்த (இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம், காது,மூக்கு, தொண்டை , )அறுவை சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
இது குறித்து வேலம்மாள் மருத்துவ கல்லூரி தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில்
மருத்துவப் பணியில் முன்னணியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனை மற்றும் அதன் சிறப்பு மருத்துவமனையில் இருதய அறிவியல் , நரம்பியல் அறிவியல், இரைப்பை மற்றும் கல்லீரல் அறிவியலின் , சிறுநீரக பராமரிப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இஎன்டி தலை மற்றும் கழுத்து அறிவை சிகிச்சை ஆகிய 5 குழுமங்களின் பிரம்மாண்ட திறப்பு விழாவை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.
இது உறுப்பு மாற்று பிரிவு மற்றும் நோயாளி பராமரிப்பு முன்னேற்றுவதற்கான அதன் உறுதி பாட்டில் ஒரு குறிப்பிட்ட தக்க மைல் கல்லை குறிக்கிறது.
உறுப்பு மாற்று மேம்பாடு நோயாளிகள் நவீன கருவிகள் மற்றும் சிறப்பு சிகிச்சை திட்டங்களால் அதிகரிக்கப்படும்.
அந்தந்த துறைகளில் கவனம் செலுத்திய நிமிடம் மருத்துவ சேவையை வழங்கும் இந்த 5 இன்ஸ்டியூட்டுகள் சிக்கலான மற்றும் நாள்பட்ட நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விரிவான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
13 ஆண்டுகளுக்கும் மேலாக விதிவிலக்கான மதுரை சேவைகளை வழங்குவதில் வேலம்மாள் மருத்துவமனை முன்னோடியாக இருந்து வருகிறது.
இந்த மருத்துவ இன்ஸ்டிடியூட்டுகளை சேர்ப்பதன் மூலம் 57 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் , 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் மற்றும் 1.2 லட்சத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மருத்துவ பராமரிப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மருத்துவமனையில் அற்பணிப்பை வேலம்மாள் மருத்துவ கல்லூரி நிருபிக்கிறது .
இந்த இன்ஸ்டியூட்டுகளின் தொடக்க விழாவின்போது வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம் பி முத்துராமலிங்கம் கூருகையில் இந்த புதிய நிறுவனங்களை தொடங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது எங்கள் நோயாளிகளுக்கு விதிவிலக்கான பராமரிப்பு மற்றும் உலக தரம் ஐந்து பிரிவு சிகிச்சைகளை ஒருங்கே வழங்குவதில் எங்கள் திறமையை மேம்படுத்தது முக்கிய பங்கு வகிக்கும் .
ஒவ்வொரு இன்ஸ்டிடியூட்டும் சிறப்பு சிகிச்சைகள் தனிப் பயலாக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் நோயாளிகளின் விளைவுகளையும் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவதற்கான பல்துறை அணுகுமுறை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .
வேலம்மாள் மருத்துவமனை தொடர்ச்சியாக 7 ஆண்டுகளாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தால் அங்கிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
விருதுகளில் சிறப்பு உறுப்பு காற்று மையம் சிறந்த கல்லீரல் மாற்று மையம் சிறந்த உறுப்பு நன்கொடையாளர் பராமரிப்பு குழு மற்றும் சிறந்த உறுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆகியவை அடங்கும்
கல்லீரல் மற்றும் கணையம் மாற்று அறுவை சிகிட்சை முதுநிலை மருத்துவர் ஜாய் வர்கீஸ் கூறுகையில்
உடல் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையில் கல்லீரல் அறுவை சிகிச்சை மிகவும் முக்கிய பங்கு வைக்கிறது இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ளனர்.
அவர்களின் சிகிச்சைக்கு குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொடுக்கும் உறுப்பு தானம் மூலம் சுமார் 8 ஆயிரம் பேர்வரை சிகிட்சை அளக்கப்படுகிறது.
இறந்தவர்களின் உடல் உறுப்பு தானம் மூலம் மிகக் குறுகிய அளவில் மட்டுமே சிகிச்சை பயனளிக்கப்படுகிறது ஆனால் உயிருடன் இருப்பவர்களின் உறுப்பு தானங்கள் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது உடல் உறுப்பு தானம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது ஆனால் தமிழகத்தில் நன்கு விழிப்புணர்வு அடைந்து ஏராளமானோர் உடலுறுப்பு தானம் செய்து பல உயிர்களை காக்கின்றனர்.
கல்லீரல் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நலமுடன் இருப்பவரின் கல்லீரல் அவரின் உடலில் இருந்து நோயாளியின் எடைக்கு ஏற்ப தேவையான அளவு அறுவை சிகிட்சையின் மூலம்
பொருத்தப்படுகிறது.
கல்லீரல் நலமுடன் இருப்பவர்கள் உடலில் இருந்தும் நோயாளிகளுக்கும் பொருத்தப்படுவதால் இயற்கையாகவே வளரும் தன்மை என்பதால் தானமாக அளிப்பவரும் நோயாளியும் விரைவில் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என கூறினார்.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் திருநாவுக்கரசு வேலம்மாள் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சியின் டீன் டாக்டர் ரத்தினவேல் மருத்துவர் கண்காணிப்பாளர் டாக்டர் கணேஷ் பிரபு தலைமை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் அறுவை சிகிச்சை இரைப்பை குடல் மருத்துவத்தின் தலைமை வழிகாட்டி மற்றும் துணை பேராசிரியர் டாக்டர் ஜாய் வர்கீஸ் இருதயவியல் இயக்குனர் டாக்டர் சண்முகம் சுந்தரம் இருதவியல் மருத்துமனைதுணை தலைவர் விவேக் ஆனந்த் இயக்குனர் சந்தோஷ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
மற்றும் ஆய்வகங்களின் இயக்குனர் டாக்டர் எம் எஸ் ராம் பிரசாத் மற்றும் அறுவை சிகிச்சை முன்னாடியின் மூத்த ஆலோசகர் டாக்டர் எம் செந்தில் மற்றும் பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.