
திருப்பரங்குன்றம் அருகே மாவட்ட அளவிலான கபடிப்போட்டி இன்று முதல் ஆரம்பம்.!
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் மந்தைத் திடலில் TSK Sports கிளப் நடத்தும் 10ம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் கபடி போட்டி இன்று 05.04.2025 மாலை 6 மணி முதல் நாளை 06.04.2025 இரவு 10மணி வரை நடைபெற உள்ளது.

செயற்கை ஆடுகளம் (mat match) அமைத்து நடத்தப்படும் இந்த கபடிப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடல் எடை 60 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.போட்டியில் பங்கேற்கும் அணிக்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 600 செலுத்த வேண்டும்.
இரண்டு நாள் நடைபெறும் இந்தக் கபடி போட்டியில் முதல் பரிசு ரூ 15000 மற்றும் வெற்றிக் கோப்பையும், இரண்டாம் பரிசு ரூ 12000 மற்றும் வெற்றிக் கோப்பையும், மூன்றாம் பரிசு ரூ 10000 மற்றும் வெற்றிக் கோப்பையும், நான்காம் பரிசு ரூ 8000 மற்றும் வெற்றிக் கோப்பையும், ஐந்தாம் பரிசு ரூ 4000 மற்றும் வெற்றிக் கோப்பையும், ஆறாம் பரிசு ரூ 4000 மற்றும் வெற்றிக் கோப்பையும், ஏழாம் பரிசு ரூ 4000 மற்றும் வெற்றிக் கோப்பையும், எட்டாம் பரிசு ரூ 4000 மற்றும் வெற்றிக் கோப்பையும், சிறப்புப் பரிசாக ரூ 20000 தொகையும்

சிறந்த ஆட்ட நாயகன் பரிசாக வெள்ளி நாணயம் மற்றும் சைக்கிள், சிறந்த தடுப்பாட்டக்காரர் பரிசாக பிரிட்ஜ், பீரோ, கட்டில், அண்டா, சிறந்த அணிக்கான பரிசாக நாற்காலி மற்றும் கேடயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் விளையாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.