ஒரே வீட்டில் 2 நல்ல பாம்பு… தலையை தூக்கு படமெடுத்து ஆடிய வீடியோ காட்சிகள்.!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் தனக்கன்குளம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் விவேகானந்தர் 8 ஆவது தெரு குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பு பிடி வீரரான சினேக் பாபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தகவலாந்து சம்பவ இடத்திற்கு வந்த சிநேக் பாபு வீட்டு மாடிப்படிக்கு அடியில் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டார். நல்ல பாம்பு இருந்ததை கண்டார். பின்னர் அரை மணி நேரப் போராட்டத்திற்கு பின் தலையை தூக்கி படமெத்து ஆடிய இரண்டு நல்ல பாம்பையும் லாவகமாக மீட்டு நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வனப்பகுதிக்குள் விடுவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.