மதுரை திருநகர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார் – பரபரப்பு வீடியோ..!

மதுரை திருநகர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!

மதுரை வேடர் புளியங்குளம் V.P சித்தன் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் மகள் ஸ்விப்ட் காரை ஒட்டி வந்துள்ளார்.

திருநகர் 2வது நிறுத்தத்தில் காரை நிறுத்தி சுந்தர மூர்த்தி அருகிலுள்ள மருத்துவமனைக்குள் சென்றுள்ளார்.

கார் என்ஜினில் இருந்து திடீரென புகை வருவதை கண்ட பெண் உடனடியாக காரில் நிறுத்தி இறங்கி அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

அப்போது கார் என்ஜினில் இருந்து தீபற்றி எரிந்ததில் காரின் முன்புறம் முற்றிலும் சேதம் அடைந்தது.

இதனையடுத்து திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலையை அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதனால் அருகில் தீப்பற்றி பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. விபத்து குறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள திருநகர் பகுதியில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!