திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த திருவிழாவில் தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னம், சேஷ, தங்க மயில், பச்சைக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

முக்கிய நிகழ்ச்சியாக 6-ந் தேதி ரத வீதிகளில் தேரோட்டம் மற்றும் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னர் சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார். முக்கிய நிகழ்ச்சியாக திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா பிப்ரவரி 7-ந்தேதி காலை‌ கோலாகலமாக தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

நன்றி: போட்டோ கார்த்தி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!