
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாமி சிலை உடைப்பு… கண்ணீர் விட்ட மக்கள் – பதட்டமான சூழல் நிலவுவதால் பெரும் பரபரப்பு.!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வயல் வெளிகள் நடுவே நல்லதங்காள் கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பில் இருந்து வருகிறது.
இதிகாசங்களில் புராணங்களை மையப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த கோவில் நல்லதங்காள் கோவிலாகவும் கடந்த 400,500 வருடங்களுக்கு முன்பு பழமை வாய்ந்த கோவிலாகும். நல்லதங்காள் அரச குடும்பத்தில் இருந்து வந்து பின்னர் வறுமையின் கொடுமையினால் தன்னுடைய ஏழு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் இறந்து விடுகிறார் பின் நாட்களில் இவர் தெய்வமாக கொண்டாடப்பட்டு வருகிறார் புராண இதிகாசங்களில் நல்ல தங்காளை தெய்வமாக போற்றப்படுகின்றனர். அதன் அடிப்படையில் ஏழு பிள்ளைகளை தள்ளிக் கொண்ற கிணறு அதன் அருகில் எழுப்பப்பட்ட கோவில் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் கிராம பகுதியில் உள்ளது இந்த இரண்டுமே இன்று வரை வழிபாட்டுத்தலமாக உள்ளது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நல்லதங்காளை தரிசனம் செய்து வருகின்றனர்.இந்த கோவில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த அர்ச்சுனாபுரம் கிராம கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் நல்லதங்காள் வழி வகைதாரர்கள் இந்த கோவில் தங்களுக்கு தான் சொந்தம் என கூறுவதாக சொல்லப்படுகிறது இது சம்பந்தமாக அர்ச்சுனாபுரம் கிராமத்தினருக்கும் நல்லதங்காள் வழிவகையினருக்கும் நீதிமன்றத்தில் கோவில் யாருக்கு சொந்தம் என வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கோவிலில் உள்ள நல்லதங்காள் விக்ரகம் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சிதல படுத்தியுள்ளனர். இதனால் வத்திராயிருப்பு பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் கோவிலுக்கு வந்த காவல்துறையினர் மோப்பநாய்,கைரேகை நிபுணர்களைக் கொண்டு நல்லதங்காள் விக்ரகம் சிலையை உடைத்த கயவர்கள் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டாலின் ஆட்சியில் கொலை கொள்ளை தினந்தோறும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது தெய்வமாக வழிபட்டு வரும் நல்லதங்காள் விக்ரகம் சிலையை உடைத்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. அசம்பாதவிதங்களை தவிர்க்க ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.