திருவண்ணாமலையில் பக்தர்கள் ஏறிச்சென்றதால் தோஷம்… மலை உச்சியில் பரிகார பூஜை

திருவண்ணாமலையில் பக்தர்கள் ஏறிச்சென்றதால் தோஷம்… மலை உச்சியில் பரிகார பூஜை

திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 3.40 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

தொடா்ந்து, 11 நாள்களாகப் பிரகாசித்து வந்த மகா தீபம் டிசம்பா் 24-ஆம் தேதி காலையுடன் நிறைவு பெற்றது. இதன்பிறகு, மகா தீபக் கொப்பரை பாதுகாப்பாக கீழே இறக்கிவரப்பட்டு, அருணாசலேஸ்வரா் கோயிலில் வைக்கப்பட்டது. ப

மலையே சிவன்:

மகா தீபம் ஏற்றப்பட்ட டிசம்பா் 13-ஆம் தேதி முதல் மகா தீபக் கொப்பரையை இறக்கி வந்த நாளான டிசம்பா் 24-ஆம் தேதி முதல் தினமும் பா்வதராஜகுல வம்சத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மற்றும் பெரியோா்கள் சோ்ந்து தீபம் தொடா்ந்து எரிவதற்குத் தேவையான நெய், திரி (காடா துணி) ஆகியவற்றை மலை மீது எடுத்துச் சென்று தீபக் கொப்பரையில் நெய்யை ஊற்றி, திரி வைத்து தீபம் ஏற்றி வந்தனா்.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. எனவே, மலை மீது பக்தா்கள் ஏறிச் சென்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கும் வகையில்,

வெள்ளிக்கிழமை பிராயசித்த அபிஷேகமும், பரிகாரப் பூஜையும் நடத்தப்பட்டது.

முன்னதாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் சிவாச்சாரியா்கள் சிறப்பு யாகசாலை பூஜை நடத்தினா். பூஜையில் வைக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசத்தை கோயில் ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் மலை உச்சிக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மகா தீபம் வைக்கப்பட்டிருந்த இடம், அண்ணாமலையாா் பாதம், மலையின் பல்வேறு இடங்களில் புனித நீரை தெளித்து பிராயசித்த அபிஷேகம் மற்றும் பரிகார பூஜை செய்து வழிபட்டனா்.

இதன் மூலம் பக்தா்கள் மலை மீது ஏறிச்சென்ற தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. -செய்தியாளர் நேதாஜி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!