பாரா விளையாட்டு விழிப்புணர்வு; காஷ்மீர் – கன்னியாகுமரி சைக்கிள் பயணம்.

பாராவிளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் நேற்று கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.
பாராவிளையாட்டை ஊக்குவிக்கவும்,நாட்டில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை வெளிகொண்டுவரவும் ,மாற்றுதிறனாளிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் முதல்பாராசைக்கிள் ஒட்டுநர் ஆதித்யா மேத்தா தலைமையில் எல்லைபாதுகாப்புபடை வீரர்களுடன் இணைந்து கடந்த நவம்பர் மாதம் 18-ம்தேதி ஸ்ரீநகர் தால் ஏரிகரையில் இருந்து,ஆதித்யாமேத்தா பவுண்டேஷன் இயக்குனர் இந்திராபெனுபுலு தலைமையில் எல்லைபாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் ஸ்ரீராகேஷ் அஸ்தானா தொடங்கிவைத்தார்.அங்கிருந்து டெல்லி,மதுரா,நாக்பூர்,ஹைதராபாத்,தர்மபுரி,மதுரை நெல்லை வழியாக 3 ஆயிரத்து 842 கி.மீட்டர் தூரத்தை கடந்து நேற்று கன்னியாகுமரியில் நிறைவுசெய்தனர்.
தொடர்ந்து விவேகானந்த கேந்திரா ஏக்நாத் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவனந்தபுரம் எல்லைபாதுகாப்புபடை டைரக்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பேபிஜோசப் தலைமை வகித்தார்.கமாண்டன்ட்கள் அஜித்குமார்,மேத்யூவர்க்கீஸ், ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினர்.
பின்னர் சைக்கிள் குழுவின் தலைவர் ஆதித்யாமேத்தா நிருபர்களிடம் கூறியதாவது :-
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் சவாலான சூழ்நிலைகளுக்கிடையே 30 பேருடன் தொடங்கினோம்.ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2013-ம் ஆண்டில் நிலப்பரப்பில் சைக்கிள் ஒட்டியபோது மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும் பெரும்சவால்களை எதிர்கொண்டநிலையில் மக்கள் அளித்த அன்பும்,வரவேற்பும் எங்களை உற்சாகபடுத்தியது.இந்த பெருந்தொற்று காலத்தில் பிஎஸ்எஃப் வீரர்கள் 30 வீரர்கள் கடுமையான சவாலையும் எதிர்கொண்டு இந்த பயணத்தை நிறைவுசெய்தனர்.இந்த பயணத்தில் 25 ஆண் ஊனமுற்ற வர்களும்,ஊனமுற்ற பெண்களும் இடம்பெற்று சாதனைபடைத்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

error: Content is protected !!