மதுரை:திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு பகுதியிலுள்ள நிலையூர் கண்மாயில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலியானார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த கூத்தியார்குண்டு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பழனி (50)
என்பவர் விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தார்,
இன்று மாலை கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள நிலையூர் கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக திடீரென வலிப்பு வந்ததால் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கண்மாயில் குளிக்க சென்றவர் திடீரென வலிப்பு வந்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.