நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவியை தொடர்ந்து, தர்மபுரி மாணவன் தற்கொலை…

மதுரையை தொடர்ந்து தர்மபுரியில் நீட் தேர்வு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார். இவர்களது குடும்பம் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தத்தனேரி மயானத்தில் மாணவி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா
தர்மபுரி ஆதித்யா

தர்மபுரியில் நீட் தேர்வு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

தர்மபுரி மாவட்டம் இலக்கயபட்டியில் உள்ள செந்தில்நகரில் வசித்து வரும் மணிவண்ணன் அவர்களின் மகன் ஆதித்யா(20) நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்து கொண்டிருந்தார்.நாளை நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிவிட்டு இன்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து காவல்துறையினர் விசராணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு அச்சத்தால் இன்று ஒரே நாளில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!