மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை இவர் தந்தை அண்ணாதுரை மற்றும் தாயாருடன் அருப்புக்கோட்டையில் உள்ள சகோதரி வீட்டில் பொங்கல் கொண்டாடிவிட்டு இன்று இரவு காரில் வீடு திரும்ப கொண்டிருந்தனர்.

அப்போது மதுரை அருப்புக்கோட்டை சாலையில், மதுரை விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக காரில் பயணித்தவர்கள் காரை நிறுத்தி வெளியேறியதால் யாருக்கும் எந்த ஒரு காயம் இல்லை.

மேலும் தகவல் அனுப்பானடி நிலைய அலுவலர் சேகர் தலை மேலான தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக காரில் வந்தவர்களுக்கு யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை தொடர்ந்து இது குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!