
போலீஸ் பூத்தில் வைத்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் 13 வயது சிறுமி ஒருவர், தனது நண்பரைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். அப்போது, பிரச்சனை ஏற்பட்டதால் அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் ராமன், அந்த சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், சிறுமியை வீட்டில் இறக்கி விட காவலர் வாகனத்தில் அழைத்துச் சென்றபோதும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து காவலர் ராமன் கைது செய்தனர். காவலர் ராமன், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
சிறுமியிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, காவலர் ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணையில், 16 வயது சிறுவனும் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தச் சிறுவனையும், அவனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயாரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.