
தென்காசி அருகே மாற்றுப் பாதை கேட்டு 8 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள் – செவி சாய்க்குமா அரசு? நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
தென்காசி அருகே மாற்றுப் பாதை கேட்டு 8 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்
– செவி சாய்க்குமா அரசு? நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
தென்காசி அருகே கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டும், இருந்து மாற்றுப் பாதை வசதி செய்து தர வலியுறுத்தியும் கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செங்கானூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள ரயில் பாதைக்கு கீழ் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. மழைக் காலத்தில் சுரங்கப் பாதையில் 5 அடி முதல் 7 அடி உயரம் வரை தண்ணீர் தேங்குவதால் பாதையை கடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக பல போராட்டம் நடத்தி வரும் இக்கிராம மக்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் செவி சாய்க்காமல் உதாசீனப்படுத்தி வருவதாகவும், சுரங்கப் பாதையில் தேங்கும் நீரை அப்புறப்படுத்தவோ, தற்காலிக பாதை அமைக்கவோ இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் “மழை வரும் போதெல்லாம் ஊரை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களுக்கு மாற்றப்பாதை அமைத்துத்தரக் கோரி” மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆழ்வார்குறிச்சி பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் கண்டன உரையாற்றினார். அப்போது செங்கனூர் கிராம மக்கள் மாற்றுப் பாதை கேட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர் எனவும், இந்த பாதை தவிர்த்து மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவோ அல்லது வேறு அவசரத் தேவைக்கு ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால் 8 கி.மீ தூரம், இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத பாதையில் நடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், இந்த ஆண்டு மழைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், சுரங்கப் பாதையில் தேங்கும் நீரை அப்புறப்படுத்தவோ, தற்காலிக பாதை அமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதற்கு உடனடியாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தலையிட்டு மாற்றுப் பாதையை உடனடியாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதில் மாவட்டத் தலைவர் நாகலிங்கம், நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் தினகரன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஈசாக் ஆகியோர் தலைமை தாங்கினார். கடையநல்லூர் பொறுப்பாளர்கள் கோபால், கண்ணன், முகமது சைபல், மேகநாதன், பாலா, ரோசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், நீண்ட நாள் கோரிக்கையான செங்கானூருக்கு அரசு பேருந்து வசதி, சாலை வசதி, சுகாதார நிலையம், அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. என 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் அரசியல் கட்சியினர் யாரும் தங்கள் ஊருக்குள் வர வேண்டாம் எனக்கூறி பேனர் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.