மதுரை: பொதுமக்கள் அவதி! குடியிருப்பு பகுதியில் வெள்ளமாய் தேங்கிய மழைநீர் .!

மதுரை: பொதுமக்கள் அவதி! குடியிருப்பு பகுதியில் வெள்ளமாய் தேங்கிய மழைநீர் .!

மதுரை மாவட்டம் சாமநத்தம் ஊராட்சியில் உள்ள பெரியார் நகர் பகுதியில் தொடர் மழையினால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் பொதுமக்கள் அவதி,
குடியிருப்பு பகுதிகளில் சாலைகளில் வெள்ளமாய் தேங்கிய மழைநீர் .

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் சுமார் 3000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

இங்குள்ள வீடுகளில் கழிவு நீர் செல்ல வழி இல்லை. மேலும் தற்போது பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து கழிவு நீரும் மழை நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் சென்று பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து சமநத்தம் ஊராட்சியில் புகார் அளித்தும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாக்கடை மற்றும் சாலை வசதிகள் அமைத்து மழை நீரை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியார் நாரைச் சேர்ந்த லூர்து மேரி என்பவர் கூறுகையில் கடந்த ஒரு வருடமாக இப்பகுதியில் தண்ணீர் தேங்கி வருகிறது சாக்கடை நீர் செல்ல வழி இல்லை அதனால் மழை பெய்ததும் சாக்கடை நீரும் கலந்து நோய் பரவும் அபாயம் உள்ளது இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!