
மதுரை திருமங்கலம் அருகே குமாராண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் சாத்தங்குடி கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ குமராண்டவர் திருக்கோயில் மற்றும் பரிகார தெய்வங்களான குலதெய்வ சுவாமிகளுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இன்று காலை 6 மணி அளவில் குமராண்டவர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பிள்ளையார் கோவிலுக்கு முதல் பூஜை நடைபெற்று குமராண்டவர் கோவிலில் இருந்து மாதா கோவிலுக்கு பெட்டி எடுத்துச் சென்று பீடங்களுக்கு ஆயுதம் வைக்கப்பட்டு யாக சாலை அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் எடுத்துவரப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து வேலுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மாரியம்மன் கோவிலுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும், சுவாமிக்கு ஐம்பொன் கவசம் அணிவிக்கப்பட்டு தீப, தூப ஆராதனைகள் நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து மதியம் அன்னதானமும் மாலை பௌர்ணமி பூஜைகளும் நடைபெற்றது.
இந்த மகா கும்பாபிஷேகத்தில் திருமங்கலம், சாத்தங்குடி, சென்னம்பட்டி நாடார் பங்காளிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். -போட்டோ கார்த்தி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.