தூத்துக்குடியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் கோரம்பள்ளத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.

முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதால் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம். தனியாா்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரம், கல்விச் சான்றுகளுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 9042260644 என்ற செல்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!