தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில முடிவின்படி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு பெண் ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாளை ரோட்டில் நடந்த மறியல் போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் பாக்கியசீலி தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஆனந்தன், செல்வம், வேல்முருகன், பெருமாள், பொன்னு, பாஸ்கர், வைஜெயந்திமாலா, மரியனேசன், ரத்னாவதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் பொன்சேகர்,மாநில துணைத் தலைவர் தமிழரசன் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் செந்தூர் ராஜன், மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை பரமசிவன், ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என் வெங்கடேசன் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.
சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகப்புடன் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 600 க்கும் மேற்பட்ட சத்துணவு பெண் ஊழியர்களை காவல்ரதுறைனர் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கயிறு கட்டி இழுத்து கைது செய்ய முற்பட்டதால் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.