கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.இதனைமுன்னிட்டு அதிகாலை 3.30மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4 மணமுதல் 5.30 மணிவரை சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து 6.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அப்போது பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என விண்ணைமுட்டும் அளவுக்கு பக்தர்கள் பக்திகோஷம் எழுப்பினர்.பின்னர் மதியம் 12 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.