கன்னியாகுமரி அரசு விரைவுபோக்குவரத்து கழக பணிமனையில் பி.எம்.எஸ் பெயர் பலகை திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளைத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார்.ஜீவானந்தம்,ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் ரமேஷ் வரவேற்றார்.பி.எம்.எஸ் மாநில பொதுச்செயலாளர் முருகேசன் கொடியேற்றி,சங்க பெயர்பலகையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட பொதுசெயலாளர் குமாரதாஸ்,ராஜீவ்காந்தி, உமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.