பிரபல பின்னணி பாடகர் SP பாலசுப்பிரமணியம் அவர்கள் காலமானதையொட்டி தமிழகம் உள்ளிட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து இரங்கல் தெரிவித்து அவரது உடல் தமிழக அரசின் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பரான இசைஞானி இளையராஜா அவர்கள் SP பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடையேண்டும் என்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணா மலையார் கோவிலுக்குச் சென்று மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.