ஒளி வெள்ளத்தில் ஜொலித்த திருப்பரங்குன்றம் முருகன்!

ஒளி வெள்ளத்தில் ஜொலித்த திருப்பரங்குன்றம் முருகன்!


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உலக நலன் வேண்டி 1008 திருவிளக்கு ஏற்றி பெண் பக்தர்கள் வழிபட்டனர்.

முருகப்பெருமான் எழுந்தருளக்கூடிய அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று உலக நலன் வேண்டி  1008 திருவிளக்கு பூஜை வெகுவிமர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டிற்கான 1008 திருவிளக்கு பூஜை நேற்று (17-ந் தேதி) கோலாகலமாக நடந்தது.

இதனையொட்டி கோவிலில் ரூ 100 செலுத்தி டோக்கன் வாங்கிய பெண் பக்தர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் இருந்து குத்து விளக்குகளுடன் கோவிலுக்கு வந்து குவிந்தனர்.

பின்னர் அவர்கள் கோவிலுக்குள் ஒதுக்கப்பட்ட  இடங்களில் உட்கார்ந்தனர். இதனையடுத்து உபயதாரர்கள் மூலமாக பெறப்பட்ட எண்ணெய் ,திரி, குங்குமம், பழம், உள்ளிட்ட அனைத்து பூஜை பொருட்கள் மற்றும் சில்வர் தட்டு, ஜாக்கெட் துனி, இனிப்பு உள்ளிட்ட சில பொருட்களை பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் வழங்கியது.

ஒளிவெள்ளம்

இதனைத் தொடர்ந்துகோவிலுக்குள் திருவாட்சி மண்பத்தில் சிவாச்சாரிகள் தீப பூஜை செய்தனர். இதனையடுத்து  சுமார் 5 அடி உயரமுள்ள பிரதான குத்து விளக்கு ஏற்றினார்.இதனை தொடர்ந்து பக்தர்கள்  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா… என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி குத்துவிளக்கு ஏற்றி பயபக்தியுடன் முருகப் பெருமானை வழிப்பட்டனர். விளக்கு ஏற்றியதும் குத்து விளக்குகள் யாவும் சுடர் ஒளிவிட்டு ஜெக ஜொலித்தது. இதனையொட்டி கோவில் முழுவதுமாக ஒளி வெள்ளத்தில் பிரகாசித்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!