தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோவில்களில் 7-வது தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் 53-வது தலமாகவும், சுக்கிரன் தலமாகவும் அமையப் பெற்றது தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில்.
தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் மீன் வடிவ காதணி அணிந்த ஸ்ரீமகர நெடுங்குழைக்காதன், குழைக்காதர் நாச்சியார், திருப்பேரை நாச்சியாருடன் தென்திருப்பேரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

திருமஞ்சனம்:
கொடியேற்றம்ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழா இந்த ஆண்டு 5.4.2023 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தென்திருப் பேரை வீதிகளில் கொடிபபட்டம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.மூலஸ்தானத்திலிருந்து கைத்தல சேவையாக உற்சவர் ஸ்ரீநிகரில் முகில் வண்ணன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதை தொடர்ந்து கொடி மரத்தில் அமைந்துள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பல்வேறு வாகனத்தில் வீதிவுலா:
பின்னர் கொடிப்பட்டத்திற்கு மாலை மரியாதை செய்து கற்பூர ஆரத்தி எடுத்து கொடி மரத்தில் கொடிப்பட்டத்தை அர்ச்சகர் காலை 7.15 மணிக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீரிதேவி, பூதேவி நாச்சி யார்களுடன் வீதி புறப்பாடும் மாலையில் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமார் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம் உள்ளிட்டவைகளில் முக்கிய மாட வீதிகள் வழியாக வீதிவுழா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

கருடசேவை:
9-ந்தேதி இரவு 9.30 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சியும், அன்ன வாகன நிகழ்ச்சியும், 10-ந்தேதி யானை வாகனத்திலும்,11-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
ஆணையப்பபிள்ளை சத்திரத்தில் எழுந்தருளல்:
8ம் நாள் திருவிழாவான இன்று காலை உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களுடன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் இன்று மாலை 4 மணிக்கு கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் வீதி புறப்பாடாகி புறையூர் ஆணையப்ப பிள்ளை சத்திரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மகா தேரோட்டம்:
9ம் திருவிழாவாக நாளை 13-ந்தேதி காலை 8 மணிக்கு மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளல், அதை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.14-ந்தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி நதியில் தீர்த்த வாரியும், அதைதொடர்ந்து பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக் கோலமும், வெற்றிவேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடு களை செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் அஜீத் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.நிகழ்ச்சியில் ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் கைங்கர்ய சபா நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் குமரேசன், ரேவதி, மற்றும் ஆணைப்பபிள்ளை வாரிசுதாரர்கள் உட்பட ஏராளமா
ன பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.