
கேரளாவில் இருந்து மதுரை வந்த 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவிலில் கோலாகல கும்பாபிஷேகம்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோளங்குருணியில் 14ஆம் நூற்றாண்டை சேர்ந்த போத்தி ராஜா வள்ளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கிபி 14ஆம் நூற்றாண்டில் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து போத்தி ராஜா வள்ளியம்மன் பெட்டியில் கொண்டு வரப்பட்டு இங்குள்ள பொதுமக்கள் கோவில் கட்டி கொண்டாடி வருகின்றனர்.
இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே சட்டை (மேலாடை) இன்றி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பெண்கள் சன்னதிக்குள் செல்ல அனுமதி இல்லை.
இந்நிலையில் போத்தி ராஜா வள்ளியப்பன் திருக்கோவிலுக்கு நூதன கோபுர கும்பாபிஷேகம் கடந்த 28ம் தேதி காலை 7 மணிக்கு கணபதி பூஜை அணுக்கிரக பூஜை வாஸ்து சாந்தி பூஜையுடன் முதல் கால பூஜைகள் முடிவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று 01.03.25 அன்றுகாலை இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் சுமங்கலி பூஜை கன்னிகா பூஜை தனலட்சுமி பூஜை உடன் நடைபெற்றது மாலை மூன்றாம் கால பூஜையாக ருத்ர ஜெபம் புருஷ சூக்தம் உள்ளிட்ட மூன்றாம் கால பூஜை உடன் நிறைவு பெற்றது.
இன்று காலை நான்காம் கால பூஜை மண்டல சாந்தி பூஜை கோ பூஜை மகா பூர்ணா உடன் நான்காம் பூஜை முடிவு பெற்று கடம் புறப்பாடுடன் கோபுர மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவிற்கு சோளங்குருணி கிராம பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
வலையங்குளம் நல்லூர், ஈச்சனோடை, பாப்பனோடை , குதிரைகுத்தி, போக்குவரத்து நகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து 30,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விழா கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கு திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன், எஸ்ஐ பாஸ்கரன், இரணியன் ஆகிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சோளங்குருணி சமூக ஆர்வலர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.