
திருப்பரங்குன்றம் அருகே விசைத்தறி உற்பத்தியாளர்களை கண்டித்து நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் நிலையூரில் நைஸ்ரக கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்களை கண்டித்து 80 பெண்கள் 400க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கும் நிலை உருவாக்கிய விசைத்தறி உற்பத்தியாளர்களை கண்டித்தும் நைஸ்ரக உற்பத்தி செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் செயலை கண்டித்து கண்டன 400க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் மதுரை நிலையூரில் உள்ள கைத்தறி நகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
கண்டன. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கைத்தறி தொழிற் சங்க ஐக்கிய குழு சார்பில் பத்மநாபன் அண்ணா தொழிற்சங்க தலைவர் தலைமையும் , ஐஎன்டியுசி கோபிநாதன் ஜனாதளம் கட்சி ரவிந்திரன் முன்னிலை வகித்தனர். அனைத்து கட்சியை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர் நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெசவு வேலை செய்யும் தொழிலை விசைத்தறி உற்பத்தியாளர்கள் சிலர் நாசம் செய்வதாக கைத்தறி நெசவாளர்கள் குற்றச்சாட்டினர்.
இது சம்பந்தமாக நெசவாளர் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த மனு குறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சர்வ கட்சி சார்பாக இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கைத்தறி நெசவில் அங்கிகரிக்கப்பட்ட குறிப்பிட்ட 11 வகை நெசவுகளை விசைத்தறையில் பயன்படுத்த தடை விதிக்கவும்.
விசைத்தறிகளை வகைப்படுத்தி நைஸ் ரக உற்பத்தி துணிகளை கைத்தறி துணியுடன் சேர்த்து விற்பனை செய்ய தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் கைத்தறியில் நைஸ் ரக உற்பத்தி 22 ரகங்களாக இருந்ததை தற்போது 11 ரகங்களாக குறைத்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.